சிங்கார் மான் கொலை வழக்கு: ஆமீர்கான் மீதான மான் வழக்கு தள்ளுபடி!
நடிகர் ஆமீர்கான் மீதான சிங்கார் மான் வதை வழக்கை புஜ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2000 -ம் ஆண்டில் லகான் படப்பிடிப்பின்போது, சிங்கார் என்ற அரிய வகை மான்களைப் பயன்படுத்தினார் என்றும், அப்போது அந்த மான்களில் சில கொல்லப்பட்டதாகவும் புஜ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆமீர்கான் வழக்குத் தொடர்ந்தார். அதில் படத்தில் நிஜ மான்களைப் பயன்படுத்தவில்லை என்றும், கம்ப்யூட்டர் மூலம் கிராபிக்ஸ் செய்யப்பட்ட மான்கள்தான் இவை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) வி.எம்.சஹாய், விசாரித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமீர்கான் உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்றங்களின் நேரம் வீணடிக்கப்படுவதாகவும், இது மாநிலத்தின் நன்மைக்கு உகந்தது அல்ல என்று கூறி வனத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications