ராஜ்யசபா இருக்கை எண் 99ல் 10 நிமிடம் அமர்ந்த நடிகை ரேகா…
டெல்லி: நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக பங்கேற்றார் நடிகையும் ராஜ்யசபா எம்.பி.யுமான ரேகா. சரியாக 10 நிமிடங்கள் மட்டுமே அவையில் இருந்த அவர் உடனடியாக கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில், இன்று அவர் ராஜ்யசபாவிற்கு வந்தார். அவரது இருக்கை எண் 99-ல் அமர்ந்தார். அருகில் இருந்த சமூக ஆர்வலர் அணு ஆகா, என்.கே.கங்குலி ஆகியோரிடம் பேசினார். அவையில் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். பின்னர் கிளம்பிச் சென்றார்.

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், ரேகா ஆகியோர் அவைக்கு சரியாக வருவதில்லை என கடந்த ஆண்டு சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இரண்டு முறை நாடாளுமன்றத்துக்கு வந்த ரேகா. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் இங்கு பங்கேற்றார்.
கடந்த 2012ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசால், ராஜ்யசபாவிற்கு எம்.பி., யாக நியமிக்கப்பட்டார். ரேகா. இவர் இதுவரை 10 முறை மட்டுமே ராஜ்ய சபாவுக்கு வந்துள்ளதால், சக எம்.பி.,க்கள், இது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினசரி வந்தா செய்தியில்லை எப்பவாச்சும் வந்தாத்தான் செய்தி என்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளார் நடிகை ரேகா.












Click it and Unblock the Notifications