குடியுரிமை சட்டத்துக்கும் இந்திய முஸ்லீம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. தலைமை இமாம் பேட்டி
டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கும் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் அஹமத் புகாரி தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களாலும் மற்ற தூண்டுதல்களாலுமே அஸ்ஸாம் குடிமக்கள் தேசிய பதிவேடு இன்னும் சட்டமாக மாறவில்லை என்று நினைவு படுத்தினார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.இந்த போராட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனாலும் இதுவரை போராட்டங்கள் கைவிடப்படவில்லை.

இமாம் வேண்டுகோள்
இந்தியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான ஜும்மா மஸ்ஜித்தின் உயர்மட்ட மதகுரு இமாம் அஹமத் புகாரி, டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வன்முறைக்குப் பின்னர் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும் என்று தனது வேண்டுகோளை முன்வைத்தார்.

மாணவர்கள் காயம்
முன்னதாக போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதிக்கொண்ட சம்பவத்தால் காவல்துறையினர் கல்லூரி வளாகத்தில் வைத்து தாக்கியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர், மேலும் 100 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

யாரும் தடுக்க முடியாது
இந்நிலையில் டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் அஹமத் புகாரி பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எதிர்ப்பு தெரிவிப்பது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை, அதைச் செய்வதை யாரும் தடுக்க முடியாது. இருப்பினும், இது கட்டுப்பாட்டுடன் செய்யப்படுவது முக்கியம், நமது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியமானது.

சம்பந்தம் இல்லை
குயுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது. ஒன்று சிஏஏ ஒரு சட்டமாக மாறியுள்ளது, மற்றொன்று என்ஆர்சி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது, அது ஒரு சட்டமாக மாறவில்லை. சிஏஏ கீழ் , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு வரும் முஸ்லீம் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை "என்று இமாம் அஹமத் புகாரி கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications