கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதை கொண்டாடிய மாணவர்களால் ஸ்ரீநகர் என்.ஐ.டியில் மோதல்
ஸ்ரீநகர்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலுளள தேசிய டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் (என்.ஐ.டி) மாணவர்கள் நடுவே மோதல் வெடித்தது. இதனால், என்.ஐ.டி மூடப்பட்டிருந்தது.
இந்திய அணி தோற்றபோது, பல்கலைக்கழகத்திற்குள் இருந்த காஷ்மீர் மாநில மாணவர்களில் பலர் அதை கொண்டாடியுள்ளனர். ஏற்கனவே தோல்வி விரக்தியில் இருந்த பிற மாநில மாணவர்களுக்கு, காஷ்மீர் மாணவர்கள் கொண்டாட்டம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இரு தரப்பு மாணவர்களும் மோதிக்கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மீது மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை கலையச் செய்தனர்.
மோதலையடுத்து இன்ஸ்டிடியூட்டோடு, மாணவர் விடுதிக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டிடியூட்டின் பதிவாளர் பயாஸ் அகமது மிர் தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மாணவர்கள் கோஷமிட்ட சர்ச்சை ஓய்வதற்குள், காஷ்மீர் கல்வி நிலையத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications