For Quick Alerts
For Daily Alerts
Just In
ஐடி ரெய்டு அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் அடி பணியாது.. கர்நாடக முதல்வர் கோபம்
பெங்களூர்: அமைச்சர் டி.கே.சிவகுமார் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றதற்கு, முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சித்தராமையா வெளியிட்டுள்ள டிவிட்டில், பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபோன்ற மிரட்டல்களுக்கு காங்கிரஸ் அடிபணியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சி குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், இந்த ரெய்டின் பின்னணியில் அரசியல் உள்ளதாக கூறியுள்ளார். எப்படியாவது ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக இப்படி நடந்துகொள்வதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் தலைமையிடம், கர்நாடகாவில் நடைபெறும் ஐடி ரெய்டுகள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு சித்தராமையா விளக்கம் கொடுத்துள்ளார்.
Comments
English summary
Karnataka CM Siddaramaiah condemn ITraid on minister DKShivakumar's house
Story first published: Wednesday, August 2, 2017, 14:37 [IST]