மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழகத்துக்கு உரிமையில்லை: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழகத்துக்கு உரிமையில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தியும், தடுக்கும், தமிழகத்தை கண்டித்தும், பல்வேறு கன்னட அமைப்புகள் இணைந்து கர்நாடகாவில் இன்று பந்த் நடத்தின. இதனிடையே, நூற்றுக்கணக்கான கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து, பெங்களூரு டவுன்ஹால் முதல், ஃப்ரீடம்பார்க் வரையில் ஊர்வலமாக சென்று தங்களது ஒற்றுமையை காண்பித்தனர்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த பேரணியில் கன்னட நடிகர் புனித்ராஜ்குமார், கர்நாடக கவிஞர்கள் பலரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இதன்பிறகு முதல்வர் சித்தராமையாவை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் கன்னட குழு சந்தித்து ஒரு மனு அளித்தது.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் அளித்த பேட்டி: கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க சட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. சட்டத்தில் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகம் தனது நீர் தேவைக்காக அணை கட்டுவதை தடுக்க தமிழகத்துக்கு உரிமை கிடையாது.
கர்நாடக அரசுக்கு, நீங்கள் (கன்னட அமைப்புகள்-மக்கள்) ஆதரவு கொடுத்துள்ளதற்கு நன்றி. உங்களது விருப்பப்படியே அரசு செயல்படும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications