மன்மோகன்சிங் மீதான நிலக்கரி ஊழல் வழக்கை முடிக்கக் கோரிய சி.பி.ஐ. அறிக்கையை நிராகரித்தது கோர்ட்!
டெல்லி: நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான வழக்கு உட்பட 6 வழக்குகளை முடித்து வைக்குமாறு சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதி சி.பி.ஐ. முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதையடுத்து இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் தினமும் விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சிறப்பு நீதிபதி பராஷர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி விசாரணையை தொடங்கினார்.
இதில் 15 வழக்குகள் தொடர்பான புலனாய்வு அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இருப்பினும் 9 வழக்குகளில் மட்டும் அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ. 6 வழக்குகளை முடித்து வைப்பதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தது.
வழக்குகளை முடித்து வைப்பதற்காக சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிமன்றம், மேற்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதில் ஒரு வழக்கு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஸா மாநிலத்தில் உள்ள தலபிரா 2 நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்தது தொடர்பானது ஆகும். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications