அரசியலில் இதெல்லாம் "ஜகஜம்"... கோர்ட் சம்மன் குறித்து மன்மோகன்சிங்
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகக் கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது வேதனையாக இருந்தாலும் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 10 ஆண்டு பதவி காலத்தில் கூடுதலாக நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் 2005-ம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
குமார் மங்கலம் பிர்லா மீதும், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையையும் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. மேலும், இந்த ஊழலில் மன்மோகன் சிங்குக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று சி.பி.ஐ. தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Of Course I am upset but this is a part of life :Former PM Manmohan Singh to reporters in Parliament #CoalScam
— ANI (@ANI_news) March 11, 2015 ஆனால் இதை நிராகரித்த நீதிமன்றம், இவ்வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 8-ந் தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மன்மோகன்சிங் நேரில் ஆஜராக இன்று சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன்சிங், பொதுவாழ்க்கையில் இத்தகைய விசாரணைகளும் ஒரு அங்கம்தான்.. இருப்பினும் வேதனையாக இருக்கிறது.
இந்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். என் தரப்பு உண்மைகளை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமாக பார்க்கிறேன். நிச்சயம் உண்மைகள் ஒருநாள் வெளியாகும்.
இந்த சம்மன் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசிப்பேன் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications