நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: குமார் மங்கலம் பிர்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்துகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஹிண்டால்கோ நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.

9 ஆண்டுகளுக்கு முன்பு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்தது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குமார்மங்கலம் பிர்லாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடனேயே பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. சிபிஐயின் இந்த நடவடிக்கையை தொழில்துறையினர் விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் குமார்மங்கலம் பிர்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications