நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு- பிரதமரை சேர்க்கக் கோரும் மனு தள்ளுபடி
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங்கை சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் இந்த வழக்கின் விசாரணைக்காக கூடுதல் அதிகாரியை சேர்த்துக் கொள்ள சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் சிபிஐ அண்மையில் தாக்கல் செய்த அறிக்கை மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் அதிகாரியை சேர்த்துக் கொள்ளவும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் பிரதமரை நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சேர்க்கக் கோரி ஒரு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் குமாரமங்கலம் பிர்லா , முன்னாள் நிலக்கரி துறைச்செயலாளர் பரேக் உள்ளிட்ட சிலர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதனையடுத்து நிலக்கரிதுறைச்செயலாளர் பரேக் தான் குற்றவாளி என்றால் அத்துறையை வைத்திருந்த பிரதமரும் குற்றவாளியே என்றும் அவருக்கு தெரியாமல் எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.பிரதமரும் சிபிஐ விசாரணைக்கு தயார் என்றும் தான் எதையும் மறைக்க வில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதனால் பிரதமர் மன்மோகன்சிங்கையும் நிலக்கரி ஊழல் வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் இன்று விசாரித்த நீதிபதிகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங்கை சேர்க்க முடியாது என்று மறுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தனர்












Click it and Unblock the Notifications