நிலக்கரி ஊழல் - விசாரணை அறிக்கையை நவம்பர் 10ந் தேதி சமர்ப்பிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கையை நவம்பர் 10-ந் தேதி தாக்கல் செய்ய சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் விகாஷ் மெட்டல்ஸ் மற்றும் பவர் நிறுவனத்தின் தொடர்பு குறித்த விசாரணையை நிறைவு செய்துவிட்டதாக சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த விசாரணை அறிக்கையை வருகிற நவம்பர் 10ந்தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்த நகல்கள் அனைத்து நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐ. இயக்குநர் மற்றும் டி.ஐ.ஜி.க்களுக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications