அதெப்படி பெப்சி, கோக் விற்பனையை தடுக்கலாம்... கேட்கிறார் மத்திய அமைச்சர்
தமிழகத்தில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களான பெப்சி, கோக் விற்பனையை தடை செய்தது நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிராக அமையும் என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்த
டெல்லி: தமிழகத்தில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களான பெப்சி, கோக் விற்பனையை தடை செய்தது நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிராக அமையும் என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்ற போது, பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கருத்து முன்வைக்கப்பட்டது. மேலும் அன்னிய நாட்டு பொருட்களைப் புறக்கணிக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டது. இதற்கு முதல் பலிகடா பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்கள்தான்.

பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோக் குளிர்பானங்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள கடைகளில் விற்பனை செய்ய போவதில்லை என்று வணிகர்Kள் அதிரடியாக அறிவித்தனர். மார்ச் 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கும் வந்துள்ளது. கிட்டத்தட்ட முக்கால்வாசிக் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை அடியோடு நின்று விட்டது.
இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய பாஜக அரசு இதுகுறித்து கவனம் திருப்ப ஆரம்பித்துள்ளது. அகாலிதளம் கட்சியை சேர்ந்தவரும், மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனைக்கு வணிகர் சங்கத்தினரின் தடை விதித்துள்ளனர். வணிகர் சங்கத்தினரின் இந்த முடிவு ,நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிரானது. தாங்கள் விரும்பும் உணவை சாப்பிட நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. இத்தகைய செயல்களால், கள்ளச் சந்தை வியாபாரங்கள் பெருகும் . எனவே தமிழக வியாபாரிகள் செயல்களை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் உணர்வுகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசு தற்போது பெப்சி கோக் விவகாரத்தில் மறைமுகமாக அல்லது நேரடியாக விரைவிலையே தலையிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம், பிரதமர் மோடியை, பெப்சி தலைவர் இந்திரா நூயி டெல்லி வந்து சந்தித்து விட்டுப் போயுள்லார் என்பதால்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications