காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ‘யுத் சேவா’ விருது பெற்ற ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலி
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 66வது குடியரசு தினத்தன்று யுத் சேவா விருது பெற்ற ராணுவ அதிகாரி உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாக மாவட்ட உள்ள டிரால் என்ற இடத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்னல் முனிந்த்ரா நாத் ராய் தலைமையில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் ஆகியோர் டிரால் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் .

அப்போது தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில், கர்னல் முனிந்த்ரா நாத் ராய்க்கு குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்ரீநகரில் உள்ள பதாமி பாக் கன்டோண்மன்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வீர மரணமடைந்தார்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் , ராணுவ வீரர் ஒருவரும், தலைமை காவலர் ஒருவரும் குண்டடிப்பட்டு உயிரிழந்தனர். ராணுவத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரி கர்னல் முனிந்த்ரா நாத் ராய்க்கு, 66வது குடியரசு தினத்தின் போது யுத் சேவா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications