வங்கிகளில் கடனுதவி பெற தாழ்வு மனப்பான்மை கூடாது: ப.சிதம்பரம் அறிவுரை
புதுக்கோட்டை: கிராம மக்கள் வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கு தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் தாஞ்சூர் கிராமத்தில் நேற்று சிண்டிகேட் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மைய திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 24 பேருக்கு தொழில்கடனும், 8 பேருக்கு கல்விக்கடன், சுய உதவிக்குழுக்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
அத்தோடு, மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு, அதிக வங்கிகள் திறக்கப் பட்டு வருவதாகவும், அதனால் கிராம மக்கள் கடனுதவி பெற தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரைக் கூறினார். மேலும், விழாவில் அவர் பேசியதாவது...

வளர்ச்சியடைந்த வங்கி....
கடந்த 1925 -ல் தொடங்கப்பட்ட இவ்வங்கி நாட்டின் வளர்ச்சியடைந்த வங்கிகளில் முக்கியமானதாகத்திகழ்கிறது.
3044 கிளைகள்....
3044 கிளைகளுடன் செயல்படும் வங்கியின் வரவு செலவு 2 லட்சத்து 85 ஆயிரம் கோடியாகும். அடுத்த ஆண்டில் ரூ. 3 லட்சம் கோடியை எட்டிப்பிடிக்கும்.
சமூகப் பணியில் வங்கி....
இந்த வங்கியின் கிளை தொடங்குவதற்கு முன்னதாகவே இப்பகுதியில் குளங்களை தூர்வாரியது, கோயிலை சீரமைப்பு, சாலைப்பணிகள், அரிமளம் மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் ஓய்வெடுக்கும் பகுதியை அமைத்தது போன்ற சமுதாயக்கடமையை ஆற்றியுள்ளது.
வியப்பு....மகிழ்ச்சி
இங்கு அமைக்கப்பட்டுள்ள சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள் கண்காட்சியை பார்த்த போது வியப்பளித்தது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு சுமார் 10 லட்சம் பேப்பர் தட்டுகள் தயாரிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதாக தகவல் தெரிவித்தனர். மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கிகளில் கடனுதவி பெற்று சொந்தமாக பொருளீட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
கடனுதவி....
எனினும், இந்த நிலை மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்கு கிராம மக்கள் வங்கிகளில் கடனுதவி பெற தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும்.
வங்கிகளில் ஆலோசனைகள்....
குறிப்பாக படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். பெரிய அளவில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு கடனுதவி அளிப்பது குறித்து உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல், ஆலோசனைகளைத் தருவதற்கு வங்கிகள் தயாராக இருக்கின்றன.
மேலும், 10000 வங்கிகள்....
வங்கிக்கிளைகளை அதிகமாகத் திறக்க வேண்டும் என்ற கொள்கை முடிவின்படி கடந்த 2011 -ல் நாடு முழுதும் 7 ஆயிரம் வங்கிக்கிளைகளும், 2012 -ல் 7500 வங்கிக்கிளைகளும், நிகழ் ஆண்டில் 10 ஆயிரம் வங்கிக்கிளைகளும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருமலையில் மட்டும்....
அதில் திருமயம் தொகுதியைப் பொறுத்தவரை ஏற்கனவே 9 வங்கிகள் மட்டுமே இயங்கி வந்தன. ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் 26 வங்கிகளாக அதிகரித்துள்ளது' எனத் தெரிவித்தார்.
மற்றும் பலர்....
இதில்,பொது மேலாளர் பிரீத்தம்லால், கிளை மேலாளர் ஜோதிமணவாளன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ராம. சுப்புராம், தி. புஷ்பராஜ், ஊராட்சித்தலைவர் எம். சரவணன், துணைத்தலைவர் கே. புவனேஸ்வரி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மணிமேகலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications