‘அதெப்படி ரொம்ப நேரம் ஜனகணமண பாடலாம்’... டெல்லி போலீசில் அமிதாப் மீது புகார்
டெல்லி: கொல்கத்தா மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, தேசிய கீதத்தை தவறாகப் பாடியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.
முன்னதாக இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருநாட்டு தேசியகீதம் பாடப்பட்டது. அப்போது இந்திய தேசிய கீதத்தை பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் பாடினார். அதேபோல், பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலியும் பாடினர்.

புகார்...
இந்நிலையில், அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக டெல்லி அசோக்நகர் போலீஸ் ஸ்டேஷனில் உல்காஸ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

தவறான வார்த்தைகள்...
ஈடன் கார்டனில் தேசிய கீதத்தைப் பாடியபோது, அமிதாப் வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாகவும், தேசிய கீதத்தை ஒரு நிமிடம் 22 நொடிகள் வரை அதிக நேரம் எடுத்துக் கொண்டு பாடியதாகவும் தனது புகாரில் உல்காஸ் தெரிவித்துள்ளார்.

கபடி போட்டியின் போதும்...
முன்னதாக கபடி லீக் போட்டியின் போதும் அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக உல்காஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

புகாரின் நோக்கம்...
அதோடு, தேசிய கீதத்தை 52 நொடிகள் மட்டுமே பாட வேண்டும் என்றும், பெரிய நடிகரான அமிதாப் தன்னுடைய தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தனது புகாருக்கான நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புகார் கடிதம்...
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் உல்காஸ் புகார் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications