‘அதெப்படி ரொம்ப நேரம் ஜனகணமண பாடலாம்’... டெல்லி போலீசில் அமிதாப் மீது புகார்
டெல்லி: கொல்கத்தா மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, தேசிய கீதத்தை தவறாகப் பாடியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.
முன்னதாக இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருநாட்டு தேசியகீதம் பாடப்பட்டது. அப்போது இந்திய தேசிய கீதத்தை பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் பாடினார். அதேபோல், பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலியும் பாடினர்.

புகார்...
இந்நிலையில், அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக டெல்லி அசோக்நகர் போலீஸ் ஸ்டேஷனில் உல்காஸ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

தவறான வார்த்தைகள்...
ஈடன் கார்டனில் தேசிய கீதத்தைப் பாடியபோது, அமிதாப் வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாகவும், தேசிய கீதத்தை ஒரு நிமிடம் 22 நொடிகள் வரை அதிக நேரம் எடுத்துக் கொண்டு பாடியதாகவும் தனது புகாரில் உல்காஸ் தெரிவித்துள்ளார்.

கபடி போட்டியின் போதும்...
முன்னதாக கபடி லீக் போட்டியின் போதும் அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக உல்காஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

புகாரின் நோக்கம்...
அதோடு, தேசிய கீதத்தை 52 நொடிகள் மட்டுமே பாட வேண்டும் என்றும், பெரிய நடிகரான அமிதாப் தன்னுடைய தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தனது புகாருக்கான நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புகார் கடிதம்...
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் உல்காஸ் புகார் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications