தருண் விஜய் இனவெறி பேச்சு.. லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி.. அவை ஒத்தி வைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தென் இந்தியர்களை கறுப்பர்கள் என பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் குறிப்பிட்டது குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள மக்கள் கறுப்பாகத்தான் உள்ளனர், நாங்கள் சேர்ந்து வசிக்கவில்லையா, நாங்கள் நிற வெறி பிடித்தவர்கள் இல்லை என கூறியிருந்தார் தருண் விஜய்.

கடும் கண்டனங்களை தொடர்ந்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி இன்று லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பின. கூச்சல், குழப்பம் நிலவியதால், அவை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications