மோடியின் "மன் கி பாத்" வானொலி உரைக்கு தடை கேட்கும் காங்கிரஸ்... தேர்தல் ஆணையம் மறுப்பு
டெல்லி : பிகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் "மன் கி பாத்" நிகழ்ச்சிக்கு தடை கோரப் போவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஆனால், அந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், வானொலியில் மாதந்தோறும் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். மனதில் இருந்து (மன் கி பாத்) என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தி வருகிறார். இதில் பொதுமக்கள் கூறும் பல யோசனைகள் குறித்து மோடி பேசி வருகிறார்.

இந்நிலையில், பிகார் சட்டப்பேரவை தேர்தல் அறிவித்துள்ளதையடுத்து, அரசு ஊடகமான வானொலியில் மோடி பேசினால், அது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இந்த மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை வானொலியில் உரைநிகழ்த்த உள்ளார் மோடி. இந்நிலையில், மோடி உரைக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறியுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, "அரசுக்கு சொந்தமான வானொலியை அரசியல் காரணங்களுக்காகப் பிரதமர் மோடி பயன்படுத்துவதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். வானொலியில் உரை நிகழ்த்துவதை மோடி தவிர்க்க வேண்டும் என்றார். ஆனால், அப்படி எதுவும் தடை விதிக்க முடியாது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலின்போது கூட இதேபோன்ற புகாரை காங்கிரஸ் கூறியது. அப்போது, பிரதமர் மோடியின் உரையை (பதிவு செய்யப்பட்ட டேப் மூலம்) நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில், தேர்தல் நடத்தை விதியை மீறியோ அல்லது ஆட்சேபனைக்குரிய வகையிலோ மோடி எதுவும் பேசியிருக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், அரசியல் கட்சியினர் புகார் அளித்தால், மோடியின் வானொலி உரையை முழுமையாக ஆய்வு செய்வோம். அதில் ஏதேனும் ஆட்சேபனைக்குரிய வகையில் இருந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications