ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் நம்பிக்கை இல்லை-அர்ஜூன் சிங்கின் பழைய கடிதத்தால் சர்ச்சை
ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று 1999-ல் அர்ஜூன் சிங் எழுதிய பழைய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக எழுதிய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை எழுப்பியுள்ளது.
1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார். அப்போது பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

எம்டிஎம்ஏ
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சதியின் பின்னணி குறித்து விசாரிக்க எம்டிஎம்ஏ என்ற விசாரணைக் குழுவும் 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

அத்வானிக்கு கடிதம்
1999ம் ஆண்டு மார்ச் மாதம் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு, மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நம்பிக்கை இல்லை
அந்தக் கடிதத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செய்ததில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று அர்ஜூன் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்டிஎம்ஏ மற்றும் சிபிஐ தலையீடு இல்லாமல் சுதந்திரமாக விசாரணை இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெல்ட் வெடிகுண்டு பற்றி விசாரணை
இதுதவிர, வர்மா மற்றும் ஜெயின் கமிஷன்களை விமர்சித்தவர்கள் எம்டிஎம்ஏவில் இருக்கக் கூடாது என்று அர்ஜூன் சிங், அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அர்ஜூன் சிங் எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதுபெரும் காங்கிரஸ் தலைவரான அர்ஜூன்சிங் 2011-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications