ஆந்திராவில் புதிய திருப்பம்: பாஜக அணிக்கு போகிறது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி!!
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில் ஆந்திராவில் புதிய திருப்பமாக தெலுங்கா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா பக்கம் தாவ இருக்கிறது.
ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்தது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. ஒருகட்டத்தில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியையே காங்கிரசுடன் இணைத்துவிடுவேன் என்றும் அறிவித்தார் அக்கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ்.
காங்கிரஸும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் ஒருவழியாக தெலுங்கானாவை உருவாக்கிவிட்டது. அதே நேரத்தில் லோக்சபா தேர்தலும் நெருங்கிவிட்டது.

இரட்டை நிலை
எப்படியும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இணைந்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் ஒருபக்கம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு மற்றொரு பக்கம் தெலுங்கானா போராட்டக் குழுவின் ஆதரவையும் கோரியது காங்கிரஸ்.

தனித்து போட்டி..
இதனால் தெலுங்கானாவில் இந்த இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடும் என்ற நிலைமை இருக்கிறது. தற்போது வெளியாகின்ற தேர்தல் கருத்து கணிப்புகள், காங்கிரஸ் கட்சியும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் சம அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறுகின்றன. ஆனால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவே என்கிறது கருத்து கணிப்புகள்.

பாஜகவுக்கு தாவல்
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவர் கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி, பாஜக அணிக்கு தாவக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏன் காங்கிரஸை ஆதரிக்கலை?
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
தற்போதைய நிலையில் காங்கிரஸுடனான கூட்டணி என்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கான வாய்ப்பும் இல்லை என்கிறது கருத்து கணிப்புகள். எங்களைப் பொறுத்தவரை அன்று தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுத்தோம். இப்போது நல்ல நிர்வாகத்தை தெலுங்கானாவில் கொடுக்க வேண்டும் என்பதுதான் இலக்கு.

பாஜக தலைமையிலான அணியில்..
அதனால் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதில் பயனில்லை. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்பதற்கான நிலைமை இருக்கிறது.. அதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறு கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications