அராஜகத்தால் அழிந்த பாஜக, காங்கிரஸ்.. அரவிந்த் கேஜ்ரிவால் கடும் தாக்கு
டெல்லி: தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கிடையே டெல்லியில் உரையாற்றினார் அரவிந்த் கேஜ்ரிவால். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி மக்கள் பெரும் சாதனையை நிகழ்த்தி காண்பித்துள்ளனர். அவர்களுக்கு எனது சல்யூட்டை காணிக்கையாக்குகிறேன். ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளது உண்மைக்கு கிடைத்த வெற்றி.
காங்கிரசும், பாஜகவும் தங்கள் தலைக்கனத்தாலும், அராஜகத்தாலும் தோல்வியை தழுவின. எனவே ஆம் ஆத்மியினர் அராஜகமின்றி நடந்து கொள்ள வேண்டும்.

ஆம் ஆத்மி என்றுமே உண்மையின் பாதையில் நடைபோடும். டெல்லி மக்கள் எங்களுக்கு தந்துள்ள இந்த மிகப்பெரிய வெற்றியை நினைத்தால் பயமாகவும் உள்ளது. இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.
முன்னதாக தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கேஜ்ரிவால், டெல்லியில் விஐபி கலாசாரத்தையும், ஊழலையும் ஒழிப்பேன். கிரண்பேடி பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் நான் முன்வைக்க மாட்டேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications