ஹைதராபாத் விமான நிலைய பெயர் விவகாரம்- ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி!
டெல்லி: ஹைதராபாத் ஐதராபாத் விமான நிலைய பெயர் விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஹைதராபாத் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு என்.டி.ராமராவ் பெயர் அண்மையில் சூட்டப்பட்டது. சர்வதேச விமான நிலையம், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு தனியாக ராமராவ் பெயர் சூட்டியதை எதிர்த்து ராஜ்யசபாவில் இன்று தொடர்ந்து 2-வது நாளாக காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பியது.

இன்று காலை சபை தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஹனுமாந்தா ராவ், பெயர் மாற்றம் விவகாரத்தை எழுப்பினார். அரசியல் ஆதாயத்திற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், நீங்கள் மட்டுமே ராஜிவ் காந்தியின் மேல் அன்பு கொண்ட நபர் அல்ல. ஆனந்த் சர்மாவால் இப்பிரச்சனை நேற்று ஏற்கனவே எழுப்பப்பட்டது. இந்த பிரச்சினையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். இவ்விவகாரத்தை நீங்கள் மீண்டும் நீங்கள் பூஜ்ய நேரத்தின்போது எழுப்ப முடியாது. இப்பிரச்சனையை தெரிவிக்க வேண்டும் என்றால் முறைப்படி நோட்டீஸ் கொடுங்கள் என்றார்.
உடனடியாக காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இச்சம்பத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்.
இதனையடுத்து குரியன், நீங்கள் எதனை செய்கிறீர்களோ அது ஒழுக்கமற்றது. நீங்கள் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றால் முறைப்படி நோட்டீஸ் வழங்குங்கள், நீங்கள் உங்களுடைய இடத்திற்கு சென்று அமருங்கள் என்று கூறினார். தொடர்ந்து சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் சபை தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது.
-
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications