மோடியைப் புகழ்ந்து பேசியதால் சர்ச்சை... சசிதரூருக்கு காங். கண்டனம்
டெல்லி: பிரதமர் மோடியைப் பற்றி புகழ்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டி பேசியிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர். அதாவது ‘பிரதமர் மோடி, அனைவரும் வெறுக்கும் தன்மையில் இருந்து தன்னை நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக மாற்றிக் கொண்டுள்ளார்' என அவர் கூறியிருந்தார்.
மேலும், 'நான் மோடியின் ரசிகர் இல்லை. பா.ஜ.,வில் சேரப்போவதும் இல்லை. தேர்தலுக்கு பிந்தைய அவரின் அணுகுமுறைகள் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின,' என அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மோடி குறித்த சசிதரூரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பச்சோந்தி...
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் கூறுகையில், ‘மோடியைப் பாராட்டி பேசிய சசிதரூர் ஒரு பச்சோந்தி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

புத்திசாலி சசிதரூர்...
மேலும், ‘சசிதரூர் போன்ற புத்திசாலி மனிதர்கள் இவ்வளவு சீக்கிரமாக ஒருவரைப் பற்றி கருத்துக் கூறுவது ஏற்புடையது அல்ல' என அவர் தெரிவித்துள்ளார்.

காங். கருத்தல்ல...
அதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஷோபனா ஓசா கூறுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கூறிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்தாகும். அதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

காங். காத்திருக்கும்...
மேலும், புதிய அரசு குறித்தும் பிரதமரின் செயல்பாடுகள் குறித்தும் கட்சியின் சார்பில் கருத்து கூற இன்னும் அவகாசம் உள்ளது. தான் கூறியதை மோடி நிறைவேற்றட்டும். காங்கிரஸ் அதற்காக காத்திருக்கும். நான் கட்சியின் சார்பில்தான் இதை கூறுகிறேன் என்றார் ஓசா.
-
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்! மாதம் மாதம் வங்கி கணக்கில் ரூ.6000! பெண்களுக்கு ஒரு 'தங்கமான்' முதலீடு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி












Click it and Unblock the Notifications