காவிரி... கர்நாடகத்திற்கு காங். மேலிடம் பகிரங்க ஆதரவு.. தமிழக விவசாயிகள் அதிர்ச்சி #cauveryverdict
டெல்லி: காவிரி விவகாரத்தில் தற்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக கர்நாடக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திக்விஜய் சிங் இப்படி கர்நாடகத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த 8ம் தேதியும் கூட இதே போலத்தான் கர்நாடகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் திக்விஜய் சிங்.

இப்போது மீண்டும் கர்நாடகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் திக்விஜய் சிங். இதன் மூலம் காங்கிரஸ் மேலிடமே, கர்நாடகத்திற்கு தனது ஆதரவு முழுமையாக தெரிவித்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
இன்றைய சுப்ரீம் கோர்ட் விசாரணைக்குப் பின்னர் அதுகுறித்து திக்விஜய் சிங் கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டியுள்ளார். கர்நாடக அரசு எடுக்கும் முடிவுகளை காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கும், உறுதுணையாக இருக்கும்.
கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட் நிராகரித்திருக்க கூடாது. ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கர்நாடக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது. குடிநீருக்குதான் முதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது சர்வதேச சட்டம் என்று கூறியுள்ளார் திக்விஜய் சிங்.
தமிழகத்தின் சட்டப் போராட்டம் குறித்து வாயையே திறக்காமல் உள்ளன காங்கிரஸ் மற்றும் பாஜக மேலிடங்கள். ஆனால் காங்கிரஸ் மேலிடத்தைச் சேர்ந்த திக்விஜய் சிங் கர்நாடகத்திற்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து கட்சியின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தி விட்டார்.
தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்படி ஒருதலைபட்சமான முடிவெடுத்திருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே












Click it and Unblock the Notifications