தாவிந்தர் சிங் கைது சந்தேகம் தருகிறது.. புல்வாமாவில் வேறு ஏதோ நடந்துள்ளது.. காங்கிரஸ் பகீர் புகார்!
காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் கைது செய்யப்பட்ட காஷ்மீர் போலீஸ் தாவிந்தர் சிங்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது.
ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் நேற்று முதல்நாள் கைது செய்யப்பட்ட காஷ்மீர் போலீஸ் தாவிந்தர் சிங்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் நேற்று முதல்நாள் ஸ்ரீநகர் அருகே கைது செய்யப்பட்டனர். போலீசால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி நவீத் பாபு, இர்பான், ரஃபி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை காரில் அழைத்து சென்ற ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.காஷ்மீரில் ஷோபியன் அருகே போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன கேள்வி
இவரது கைது தொடர்பாக காங்கிரஸ் லோக்சபா தலைவர் அதிர் சவுத்திரி கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், காஷ்மீரில் நடந்து வரும் முறைகேடு இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொலை செய்யப்பட்டதும் இதன் மூலம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இதில் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும் தாவிந்தர் சிங்கிற்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். புல்வாமா தாக்குதல் குறித்து நிறைய கேள்விகளை தாவிந்தர் சிங் கைது எழுப்பி உள்ளது. உண்மையான குற்றவாளிகள் யார் என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது.

விசாரிக்க வேண்டும்
இதை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும். பலர் இதற்கு பின் இருக்கலாம். தாவிந்தர் சிங்கிற்கும் யாருக்கும் தொடர்பு இருந்தது. தாவிந்தர் சிங் இத்தனை நாட்கள் எப்படி மாட்டாமல் தப்பித்து வந்தார். இவர்களை இயக்கியது யார் என்று விசாரிக்க வேண்டும்.

யார் இவர்
தாவிந்தர் சிங், ஒருவேளை இஸ்லாமியராக இருந்திருந்தால், ஒருவேளை கான் என்று பெயர் வைத்து இருந்தால் கதையே வேறு. அவரை ஆர்எஸ்எஸ் அமைப்பு தூக்கில் போட சொல்லி இருக்கும். பாஜக கடுமையாக விசாரித்து இருக்கும். ஆனால் இப்போது அவர்கள் வாயையே திறக்கவில்லை என்று காங்கிரஸ் லோக்சபா தலைவர் அதிர் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications