சகிப்புத்தன்மை பற்றி பேச காங்கிரசுக்கு தகுதியில்லை: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி ஆவேசம்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலின் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். புர்னியா மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், அறிவுஜீவிகள் விருதுகளை திருப்பிக்கொடுப்பது, அவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல நடப்பு விவகாரங்களுக்கு மோடி கடுமையாக பதிலடி கொடுத்தார்.
மோடியின் பேச்சிலிருந்து முக்கிய பகுதிகள்: பீகாரில் லாலு பிரசாத் 15 வருடமும் அவரது சின்னத்தம்பி (நிதீஷ்) 10 வருடமும் ஆட்சி செய்தனர். அந்த காலகட்டங்களில் நடந்த வளர்ச்சி பணிகள் என்ன?

பீகாரில் மீண்டும் காட்டுராஜ்ஜியம் வந்துவிட கூடாது என்ற அச்சத்தால், பாஜக பக்கம் பெண்கள் திரளாக வந்துகொண்டுள்ளனற்.
உங்களுக்கு நினைவுள்ளதா, 1984ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி டெல்லியில் என்ன நடந்தது என்பது? சீக்கிய மக்கள் சரமாரியாக படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை சம்பவம் குறித்து காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அந்த காங்கிரஸ் தற்போது சகிப்புத்தன்மை குறித்து பேசுகிறது.
காங்கிரசுக்கு அந்த தகுதி கிடையாது. இந்தியா இன்னும் அந்த படுகொலையை மறக்கவில்லை. சகிப்புத்தன்மை பற்றி காங்கிரஸ் கட்சி பாடம் எடுப்பதை மக்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் தனது நாடகங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
லாலுவும், நிதீஷும் காங்கிரசுக்கு எதிராக போராடி வந்தவர்கள். ஆனால் இப்போது எந்த நிர்பந்தத்தால் பீகாரில் காங்கிரசுக்கு தங்கள் கூட்டணியில் 40 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள்?
நிதீஷும், லாலுவும் என்ன ஆட்டம் வேண்டுமானாலும் ஆடட்டும். பீகார் தேர்தல் முடிவு நவம்பர் 8ம் தேதி வெளியாக உள்ளது. எனவே, இந்த ஆண்டு பீகார் மக்கள் இரு தீபாவளிகளை கொண்டாடப்போகிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications