இந்தியாவின் தலைநகரம் டெல்லி... இரண்டாவது தலைநகரம் எது தெரியுமா?
கர்நாடகாவுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவை நாட்டின் இரண்டாவது தலைநகராக மாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
டெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் இரண்டாவது தலைநகராக பெங்களூரு மாற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அடுத்த மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சட்டசபை தேர்தலையொட்டி, கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள், பெங்களூரு நாட்டின் இரண்டாவது தலைநகராக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக முறையில் இல்லாமல் இந்த முறை, மாநிலத்தின் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தனித் தனியாக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்துள்ளது.
அதில் பெங்களூரு குறித்த தேர்தல் அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், சாலை, பாலம் உள்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகள், ஒரு லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூங்காக்கள் நகரம் என்ற பெயர் பெற்ற பெங்களூருவில் உள்ள பூங்காக்கள் மேம்படுத்தப்படும். மேலும், ஏரிகள், குளங்கள் போன்றவை புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். நகரம் முழுவதும் சோலார் மின்வசதி செய்யப்படும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வசதி செய்யப்படும்.
மொத்தத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் இரண்டாவது தலைநகராக பெங்களூரு மாற்றப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications