லோக்சபா தேர்தலில் காங்.குக்கு 'டபுள் டிஜிட்'டில்தான் 'சீட்' கிடைக்கும்.. அத்வானி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியைத் தழுவும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமது வலைப்பக்கத்தில் அத்வானி பதிவு செய்துள்ளதாவது: அண்மைய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது. எமர்ஜென்சிக்குப் பின்னர் காங்கிரஸ் சந்தித்திருக்கும் 2வது தோல்வி இது.

2014 லோக்சபா தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளையே காங்கிரஸ் கைப்பற்றினாலும் இந்த நாடு ஆச்சரியப்படுவதற்கில்லை. ஊழல், பணவீக்கம்,, கறுப்பு பணம் என பல பிரச்சனைகள் அக்கட்சிக்கு எதிராக உள்ளன.
இவ்வாறு அத்வானி அதில் பதிவு செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications