காங்கிரஸ் எம்பிக்களுக்கு நாட்டைப் பற்றி அக்கறை இல்லை: சுமித்ரா மகாஜன் கண்டனம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் காங்கிரஸ் எம்பிக்களுக்கு நாட்டைப் பற்றி அக்கறை இல்லை என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க நடந்ததாக கூறப்படும் முறைகேட்டு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லியை பதவி நீக்க செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் இன்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

அவைக்கு மையப் பகுதிக்கு சென்று அவர்கள் அருண் ஜேட்லிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிழவியதால் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
அப்போது பேசிய சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் எம்பிக்களுக்கு நாட்டைப் பற்றி அக்கறை இல்லை. அவையை நடத்த விடமால் தடுப்பதே காங்கிரஸ் உறுப்பினர்களின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதும், நாடாளுமன்றத்தை முடக்குவதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications