தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி.. ராகுல் காந்தியுடன் இளங்கோவன் சந்திப்பு
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசினார் இளங்கோவன். இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது: தமிழக சட்டபேரவை தேர்தல் குறித்து ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தினேன்.

தற்போதய சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் உள்ளது.தனியாக போட்டியிட வேண்டும் என்பதற்கான எல்லா ஆயத்தங்களிலும் சென்று கொண்டு இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி தேவை என்று அவசியம் ஏற்பட்டால் அதை பற்றி மேலிடம் முடிவு செய்யும்.
எங்களை பொறுத்த வரையில் எங்கள் கட்சியை நாங்கள் பலபடுத்த வேண்டும். 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் அதற்கான உறுப்பினர்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவு செய்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications