2018-ஐ காங்கிரஸ் 'பயங்கரமாக' அடித்து ஆடப் போகிறது.. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை!
ராய்ப்பூர்: 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலைவிட காங்கிரஸ் கட்சி தற்போதைய தேர்தலில் மிக அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 20 தொகுதிளுக்கு நவம்பர் 7-ந் தேதியும் எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

2018-ம் ஆண்டு சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களிலும் பாஜக வெறும் 15 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். அதேநேரத்தில் பாஜக முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி இருந்தன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500 விலைக்கு விற்பனை; 17.5 லட்சம் பேருக்கு இலவச வீடு; எல்கேஜி முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி; ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியது. பாஜக, பீடி இலை சேகரிப்போருக்கு கூடுதல் போனஸ், ரூ10 லட்சம் இலவச காப்பீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தது.
இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக முதல்வர் பூபேஷ் பாகல் கூறியதாவது: சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும். 2018 தேர்தலைவிட மிக அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி பெற்று பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களுடன் வலிமையான ஆட்சியை அமைக்கும் என்றார்.
இதனிடையே தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சிதான் அமையப் போகிறது என நம்பிக்கை தெரிவித்தார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications