14 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த கைதிகள் அனைவரும் விடுதலை: கேரளா அறிவிப்பு
திருவனந்தபுரம்: 14 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் என்று கேரளா மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா அறிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.

அண்மையில் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆயுள் தண்டனைக் கைதிகளை மாநில அரசு விடுதலை செய்வதற்கான தடையை நீக்கியது.
இதனைத் தொடர்ந்து மாநில அரசுகள், 14 ஆண்டுகாலம் மற்றும் அதற்கு அதிகமாக சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வருகின்றன. இந்த அடிப்படையில் கேரளா அரசும் இன்று 14 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications