டெல்லி: செங்கல்லால் பெண்ணை அடிக்க முயன்ற கான்ஸ்டபிளுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெண்ணை செங்கல்லால் அடிக்க முயன்று பரபரப்புக்குள்ளான போலீஸ் கான்ஸ்டபிளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
மத்திய டெல்லியில், டூ வீலர் ஒன்றை ஓட்டி சென்ற பெண்மணி, போக்குவரத்து விதிகளை மீறிவிட்டார் என கூறி அவரிடம் சுபாஷ் சந்திரா என்ற தலைமை கான்ஸ்டபிள் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு மறுத்த அந்த பெண்ணை அவர் செங்கல்லை கொண்டு தாக்கியுள்ளார். தனது சிறு குழந்தையையும் அவர் திட்டினார் என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து போக்குவரத்து கான்ஸ்டபிள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன் அவர் மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவருக்கு, 5 நாட்களுக்கு பிறகு டெல்லி கோர்ட் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.10 ஆயிரம் பிணையத்துடன் இந்த ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications