அமித்ஷாவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த போலீஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த 2 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் வன்முறையைத் தூண்டும் வகையில் அமித்ஷா பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமித்ஷா மீது அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இக்குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் நீதிமன்றம் ஏற்காமல் திருப்பி அனுப்பியது.

இந்த நிலையில் அமித்ஷா மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீஸ் துணை கண்காணிப்பாளர் யோகேந்தர் சிங், சப் இன்ஸ்பெக்டர் பாரத் லால் ஆகியோர் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் பாரத் லால் இந்த வழக்கை விசாரித்தார், யோகேந்திர சிங் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக அம்மாநில காவல்துறை உயர் அதிகாரி ஹெச்.என். சிங் கூறுகையில், இது வழக்கமான இடமாற்றம் தான், அமித்ஷா வழக்குடன் தொடர்பு கிடையாது. என்றார்.












Click it and Unblock the Notifications