அஸ்ஸாமில் கொரோனாவுக்கு முதல் பலி- டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்- வடகிழக்கில் முதலாவது உயிரிழப்பு
குவஹாத்தி: அஸ்ஸாமில் கொரோனாவுக்கு 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் கொரோனா தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ள முதலாவது உயிரிழப்பு இது.
கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைவாக இருந்து வந்தது.

அஸ்ஸாமில் இதுவரை 29 பேரும் அருணாசல பிரதேசத்தில் ஒருவரும் மணிப்பூர் 2; மிசோரம், திரிபுராவில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேகாலயா, நாகாலாந்தில் கொரோனா தாக்கம் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் அஸ்ஸாமில் 65 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவுக்கு ஏற்பட்டுள்ள முதலாவது உயிரிழப்பு இது.
Recommended Video
உயிரிழந்த முதியவர் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர். அதற்கு முன்னதாக செளதிக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர். உயிரிழந்த முதியவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications