கொரோனா: இந்தியாவில் பலி- 3; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆகவும் அதிகரித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் 140 நாடுகளை ஆட்டுவித்து வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை சுமார் 1.60 லட்சம் பேர் கொரானாவினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை சுமார் 6,500. இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் நேற்று பலியாகினர். இந்த நாட்டில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1800. ஸ்பெயினில் 97 பேரும் பிரான்ஸில் 29 பேரும் நேற்று ஒரே நாளில் மரணித்துள்ளனர். இங்கிலாந்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இக்கொரோனாவின் தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களிலும் கிடைத்த தகவல்களின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று மாலை இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114ஆகத்தான் இருந்தது. அதன் பின்னர் அதிகரித்திருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஏற்கனவே நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications