கொரோனா: இந்தியாவில் பலி- 3; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆகவும் அதிகரித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் 140 நாடுகளை ஆட்டுவித்து வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை சுமார் 1.60 லட்சம் பேர் கொரானாவினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை சுமார் 6,500. இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் நேற்று பலியாகினர். இந்த நாட்டில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1800. ஸ்பெயினில் 97 பேரும் பிரான்ஸில் 29 பேரும் நேற்று ஒரே நாளில் மரணித்துள்ளனர். இங்கிலாந்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இக்கொரோனாவின் தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களிலும் கிடைத்த தகவல்களின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று மாலை இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114ஆகத்தான் இருந்தது. அதன் பின்னர் அதிகரித்திருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஏற்கனவே நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications