கொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம்
மீரட்: கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் திடீரென அமல்படுத்தப்பட்ட 21 நாள் லாக்டவுன் பல லட்சம் கூலித் தொழிலாளர்களின் வாழ்வில் பெருந்துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Recommended Video
நாட்டு மக்கள் கொரோனவால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 21 நாட்கள் லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த லாக்டவுன் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை.

கைவிட்ட தொழிற்சாலைகள்
தலைநகர் டெல்லியில் தினக்கூலிகளாக பணிபுரிந்த பிற மாநில தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை இழந்தனர். அவர்கள் பணிபுரிந்த தொழிற்சாலைகள், நிறுவனங்கள் 21 நாட்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முடியாது என கைவிரித்தன. இதனால் கையிருப்புடன் இரண்டொரு நாள் பொறுமை காத்தவர்கள், சொந்த மாநிலத்துக்கு ஒரே நேரத்தில் புறப்பட்டனர்.

தேசம் திகைத்தது
இப்படி பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென டெல்லியை விட்டு புறப்பட்ட தருணம் தேசத்தையே திகைக்க வைத்தது. இவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு பல நூறு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றவர்கள். பிஞ்சு குழந்தைகள் பொதி மூட்டைகளுடன் வெறுங்காலில் அந்த தார்சாலைகளில் நடந்து செல்லும் காட்சிகள் நெஞ்சை இடியாய் தாக்குகின்றன.

100 கி.மீ நடைபயணம்
அப்படி டெல்லியால் கைவிடப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு கால்நடையாகவே புறப்பட்டவர்கள்தான் வகீலும் யாஸ்மினும்.. இதில் யாஸ்மீன் 8 மாத கர்ப்பிணி. அவர்கள் பணிபுரிந்த டெல்லி தொழிற்சாலை ஒன்று தங்கும் இடத்தையும் கொடுத்திருந்தது. ஆனால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் இனி எந்த வசதியும் செய்து தரப்போவது இல்லை என கைவிரித்தார் தொழிற்சாலை உரிமையாளர். இதனால் வேறுவழியே இல்லாமல் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்கு அவர்கள் புறப்பட்டனர்.

மனிதாபிமான கரங்கள்
8 மாத கர்ப்பிணியான யாஸ்மினை அழைத்துக் கொண்டு வகீல் நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலில் பயணித்துக் கொண்டே இருக்கிறார்... மீரட் வரும் வரை ஒரு உணவகம் கூட திறக்கவில்லை.. கர்ப்பிணியான மனைவியை கொடும் பட்டினியுடனேயே வகீல் அழைத்துச் செல்கிறார். மீரட் நகரில் தஞ்சமடைந்து உதவி கோரினார் வகீல். உள்ளூர் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் உணவு வழங்கி ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications