அன்புமணி ராமதாஸ் மீதான ஊழல் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த சிபிஐ கோர்ட்
டெல்லி: மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது குறித்து சிபிஐ தொடர்ந்த வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்றம் வரும் மார்ச் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது உத்தரபிரதேசத்தில் ரோஹில்கந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்திற்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக அவர் உள்பட 9 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அன்புணி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் இந்த வழக்கில் அன்புமணி மீது இதுவரை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அன்புமணி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி சார்பில் கூறப்பட்டதாவது, சிபிஐ-இன் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மார்ச் 17ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது.
அதனால் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications