For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரிசி திருடியதாக கொல்லப்பட்ட மது சாப்பிட்டு பலநாள் ஆகிறது.. பிரேத பரிசோதனையில் திடுக்

கேரளாவில் கொல்லப்பட்ட மது மது சாப்பிட்டு பலநாள் ஆகிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நாம் வாழும் இந்த சமூகம் நாகரீகமானது தானா?- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவில் கொல்லப்பட்ட மது மது சாப்பிட்டு பலநாள் ஆகிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    கேரளாவில் அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களை திருடியதாக கூறி மது என்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையை செய்தவர்கள் அதை வீடியோவும் எடுத்து இருந்தார்கள்.

    இந்த சம்பவம் இந்தியா முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இதில் நிறைய விஷயங்கள் தெரிய வந்து இருக்கிறது.

    மோசம்

    மோசம்

    இவர் மோசமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பிரச்சனையில் சில கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

    ஒரு பருக்கை கூட இல்லை

    ஒரு பருக்கை கூட இல்லை

    தற்போது இவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் அவர் வயிற்றில் ஒரு பருக்கை கூட இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. அவர் கடந்த சில நாட்களாக சாப்பிட்டதற்காக அடையாளமே இல்லை என்றும் கூறியுள்ளனர்.

    ஒரே ஒரு பழம்

    ஒரே ஒரு பழம்

    அவர் கடைசியாக சில நாட்களுக்கு முன் ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு இருக்கிறார். அதுவும் காட்டில் கிடைக்கும் பழமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.மது நீண்ட நாட்களாக திட உணவு சாப்பிட்டதற்கான அடையாளமே இல்லை என்றுள்ளனர்.

    உடல்நிலை மோசம்

    உடல்நிலை மோசம்

    அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. மேலும் சாப்பிடாமல் உடல் எலும்புகள் மோசமான நிலையில் இருந்துள்ளது. எளிதாக உடைந்து நொறுங்கிவிடும் நிலையில் எலும்புகள் காணப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    A Tribal youth named Madhu killed by a group of people in Kerala. The youth was mentally challenged. The group of people beaten him for stealing eatables. Postmodern report says that couldn't find any food inside in Madhu stomach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X