என்னது ராணுவ புரட்சிக்கு திட்டமிட்டேனா?: மறுக்கும் வி.கே.சிங்
டெல்லி: நாட்டில் ராணுவ புரட்சிக்கு தாம் திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் நிராகரித்திருக்கிறார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வி.கே. சிங் அளித்த பேட்டியில், எனது வயது வரம்பு பிரச்னை குறித்து தொடர்ந்து கேள்வி எழுந்ததன் காரணமாக ராணுவப் புரட்சி நடத்த டெல்லியை நோக்கி இரண்டு படைகளை நகர்த்தினேன் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்பட்டன.
இந்தியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது. நான் ராணுவ புரட்சிக்கு திட்டமிட்டதாக கூறுவது அபாண்ட பழி. ராணுவத்தில் ரகசியப் புலனாய்வுப் பிரிவை நடத்தினேன் என்பதும் தவறான குற்றச்சாட்டு. இதுபோன்று குற்றம் சுமத்துவது இன்னமும் நீடிக்கிறது.
இதற்கு பிரதமர் அலுவலகத்தில் உள்ள சண்டீகரைச் சேர்ந்த மூத்த அதிகாரியும், மூத்த பத்திரிகையாளர்கள் இருவருமே காரணம் என்றார்.