‛‛கதறிய கள்ளக்காதல் ஜோடி''.. நடுரோட்டில் படுக்க வைத்து தாக்கிய நபர்.. மேற்கு வங்கத்தில் கொடூரம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரு ஜோடியை நடுரோட்டில் கொடூரமாக ஒருவர் மூங்கில் குச்சி வைத்து தாக்குவதும், அதனை யாரும் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதுபற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அதாவது சாலையில் ஆண், பெண் என இருவர் அமர்ந்துள்ளனர். அவர்களை சுற்றி ஏராளமான பொதுமக்கள் நிற்கின்றனர். இந்த வேளையில் ஒருவர் இருவர் மீதும் மூங்கில் வைத்து கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார்.

முதலில் பெண் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மூங்கில் குச்சியால்அந்த நபர் பெண்ணை ஈவு ஈரக்கமின்றி கொடூரமாக தாக்குகிறார். வலி தாங்க முடியாத அந்த பெண் சாலையில் உருண்டு அலறி துடிக்கிறார். அதேபோல் சாலையில் அமர்ந்திருந்த ஆண் மீதும் அந்த நபர் மூங்கில் குச்சியால் தாக்குகிறார். அவரும் வலி தாங்க முடியாமல் துடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அந்த சம்பவம் எங்கு நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தியபோது தான் அது மேற்கு வங்க மாநிலத்தில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ரா எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கள்ளக்காதல் ஜோடி மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த ஜோடி மீது தாக்குதல் நடத்தும் நபரின் பெயர் தஜிமுல் என்ற ஜேசிபி என்பதும், அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் இந்த வீடியோவை காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களின் எக்ஸ் வலைதளங்களில் பகிர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்க்குலைந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் இதுபோன்ற வன்முறைகள் தலைவிரித்தாடுகிறது. சந்தேஷ்காலி சம்பவத்தை தொடர்ந்து இதுபோன்று தொடர்ந்து நடக்கிறது என குற்றம்சாட்டி உள்ளன.
இந்த வீடியோ வைரலான நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். வீடியோவில் உள்ளவர்களின் அடையாளங்களை வைத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை்கு பிறகு தான் இந்த சம்பவம் குறித்த முழுவிபரம் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications