For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

16ம் தேதி பிறந்ததால் நரேந்திரா, மோடி எனப் பெயரிடப்பட்ட இரட்டையர்கள்...

|

இந்தூர்: வாக்கு எண்ணிக்கை நாளான கடந்த 16-ந்தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 16ம் தேதி எண்ணப்பட்டது. தேதல் முடிவுகளின் படி, பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி விரைவில் பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.

இந்நிலையில், மோடி வெற்றி பெற்ற அன்று பிறந்த தனது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நரேந்திரா மற்றும் மோடி எனப் பெயரிட்டுள்ளார் இந்தூர் பெண் ஒருவர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் தான் அவர். இது தொடர்பாக ஆர்த்தி கூறுகையில், ‘‘எனக்கு குழந்தைகள் பிறந்த நாளில் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்ற தகவல் வந்தது. எனவே என் இரு குழந்தைகளுக்கும் அவர் பெயரை சூட்டி விட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
In awe of BJP leader and PM-elect Narendra Modi's personality, a couple have named their twin sons born on May 16 as 'Narendra' and 'Modi'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X