நேரில் வந்து ஆஜராகுங்க.. ஆஞ்சநேயருக்கு சம்மன் அனுப்பிய பீகார் கோர்ட்!
பாட்னா: ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள்... வெண்ணெய் சாத்துவார்கள். ஆனால் இந்துக் கடவுள் ஆஞ்சநேயரை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி பீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நீதிமன்றங்கள் எத்தனையோ விநோதமான வழக்குகளை சந்தித்துள்ளன. சமீபத்தில் கூட இதே பீகாரில்தான் சீதையை கைவிட்டதாக இந்து கடவுள் ராமர் மீது கூட வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Dehri on Sone (Rohtas district, Bihar): SDM Court issues summons to Lord Hanuman to appear in the Court. pic.twitter.com/4dgKGqUmnY
— ANI (@ANI_news) February 16, 2016
அதேபோல சத்தீஸ்கரில் நீதிபதி ஒருவரின் தோட்டத்தில் மேயந்த வெள்ளாடு, அதன் உரிமையாளருடன் கைது செய்யப்பட்டது. பின்னர் ஆடும், அதன் உரிமையாளரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இப்போதும் பீகார் மாநிலத்தில்தான் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி சம்மன் அனுப்பியுள்ளது நீதிமன்றம். அங்குள்ள ரோக்தாஸ் மாவட்டம் தெக்ரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிராக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் மாநில அரசின் பொதுப்பணித்துறை புகார் தெரிவித்து உள்ளது.
இதனையடுத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிஉள்ளது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் நகலானது, ஆஞ்சநேயர் சிலையில் தொங்கவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகி உள்ளது. இது தற்போது விவாதத்திற்குள்ளாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வைரலாகி வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications