வெளியே வராதீங்கன்னு கேட்பதே இல்லை.. உக்கி போடு.. இதுதான் சரியான தண்டனை.. இது தேவையா!
அமிருதசரஸ்: கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீஸார் தோப்புக் கரணம் போட வைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500- ஐ தாண்டியது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 10-க்கு மேல் உயர்ந்துள்ளது.
|
அம்சங்கள்
இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மால்கள், தியேட்டர்கள், கோயில்கள், பள்ளி, கல்லூரிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன.

மோசமான விளைவுகள்
மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பஞ்சாப், மும்பை, நாக்பூர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் மோசமான விளைவுகள் தெரியாமல் அரசு கூறியும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தேவையில்லாமல் தெருக்களில் சுற்றித் திரிகிறார்கள்.

நடுரோட்டில்
இதையடுத்து பஞ்சாப்பில் லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மலேர்கோட்லா பகுதியில் இளைஞர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அத்தியாவசியத்திற்காக வெளியே வரவில்லை என தெரிந்தது. இதையடுத்து அவர்களை நடுரோட்டில் வைத்து தோப்புக் கரணம் போட வைத்தனர்.

நாராயணசாமி
பின்னர் அவர்களை வெளியே போக வேண்டாம் என எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசத்தில் 144 தடையுத்தரவை அடுத்து தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications