மாட்டு சாணமும் கோமியமும் கொரோனாவுக்கு அருமருந்தாம்... பாஜக எம்.எல்.ஏ.வின் அரிய கண்டுபிடிப்பு
குவஹாத்தி: கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க மாட்டு சாணம், மாட்டு கோமியம் ஆகியவை உதவும் என்று அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
அஸ்ஸாம் சட்டசபையில் கால்நடைகள் கடத்தல் தொடர்பான விவாதத்தின் போது சுமன் ஹரிபிரியா பேசியதாவது:

மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலம் வெளியாகும் புகைக்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் திறன் இருக்கிறது. மாட்டு சாணம், கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக அரசும் ஆய்வு செய்து வருகிறது.
குஜராத்தில் மாட்டு சாணம், மாட்டு கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், நோயாளிகளுக்கு மருந்தாகவே கொடுக்கப்படுகிறது. இதை கொடுக்கும் போது நோயாளிகளை பசுவின் அருகே அமரவும் வைக்கின்றனர்.
மாட்டு சாணம் மற்றும் கோமியம் ஆகியவை புற்றுநோயை குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டவை. நமது முன்னோர்கள் மதரீதியான சடங்குகளில் சாணம், கோமியத்தை பயன்படுத்துவதன் பின்னணியில் அறிவியலும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
மாடுகள் நமக்கு தரும் ஒவ்வொரு பொருளுமே மிகவும் முக்கியமானவை. முனிவர்கள் துளசி இலைகளை அன்று சடங்குகள், யாகங்களுக்கு பயன்படுத்தினர். இன்று நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது துளசி இலை என பயன்படுத்துகிறோம்.
Recommended Video
மாட்டு சாணம், கோமியம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மாநில பாஜக தலைவரும் நிதி அமைச்சருமான ஹிமாந்தா பிஸ்வாஸ் ஆய்வு செய்து வருகிறார். அவரிடம் இருந்து நான் நிறையவே கற்றுக் கொண்டேன். இவ்வாறு சுமன் ஹரிபிரியா கூறினார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications