மாட்டு சாணமும் கோமியமும் கொரோனாவுக்கு அருமருந்தாம்... பாஜக எம்.எல்.ஏ.வின் அரிய கண்டுபிடிப்பு
குவஹாத்தி: கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க மாட்டு சாணம், மாட்டு கோமியம் ஆகியவை உதவும் என்று அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
அஸ்ஸாம் சட்டசபையில் கால்நடைகள் கடத்தல் தொடர்பான விவாதத்தின் போது சுமன் ஹரிபிரியா பேசியதாவது:

மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலம் வெளியாகும் புகைக்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் திறன் இருக்கிறது. மாட்டு சாணம், கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக அரசும் ஆய்வு செய்து வருகிறது.
குஜராத்தில் மாட்டு சாணம், மாட்டு கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், நோயாளிகளுக்கு மருந்தாகவே கொடுக்கப்படுகிறது. இதை கொடுக்கும் போது நோயாளிகளை பசுவின் அருகே அமரவும் வைக்கின்றனர்.
மாட்டு சாணம் மற்றும் கோமியம் ஆகியவை புற்றுநோயை குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டவை. நமது முன்னோர்கள் மதரீதியான சடங்குகளில் சாணம், கோமியத்தை பயன்படுத்துவதன் பின்னணியில் அறிவியலும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
மாடுகள் நமக்கு தரும் ஒவ்வொரு பொருளுமே மிகவும் முக்கியமானவை. முனிவர்கள் துளசி இலைகளை அன்று சடங்குகள், யாகங்களுக்கு பயன்படுத்தினர். இன்று நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது துளசி இலை என பயன்படுத்துகிறோம்.
Recommended Video
மாட்டு சாணம், கோமியம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மாநில பாஜக தலைவரும் நிதி அமைச்சருமான ஹிமாந்தா பிஸ்வாஸ் ஆய்வு செய்து வருகிறார். அவரிடம் இருந்து நான் நிறையவே கற்றுக் கொண்டேன். இவ்வாறு சுமன் ஹரிபிரியா கூறினார்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி?












Click it and Unblock the Notifications