மாட்டு 'கோமியம்' குடிச்சா மனுசன் 'புற்றுநோய்' போயிடுமாம்: பா.ஜ.க. எம்.பி.யின் 'டாக்டர்' பேச்சு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பசு மாட்டின் சிறுநீரான கோமியத்தை குடித்தால் மனிதர்களைத் தாக்கும் புற்றுநோய் 100% குணமாகிவிடும் என்று ராஜ்யசபாவில் பாரதிய ஜனதாவின் எம்.பி. ஷங்கர்பாய் கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் இன்று பசு வதை தடுப்பு பற்றிய விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ஜ.க. எம்.பி ஷங்கர்பாய், நீங்கள் உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், பசு மாட்டினை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

நான் உறுதி அளிக்கிறேன். அதன் சிறுநீர் (கோமியம்) புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும். ஆனால் நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை.
பசுக்களை வதைப்பது பாவம். வேதங்களில் பசுக்கள் அன்னையர்களுக்கு இணையாக போற்றப்படுகிறது. சிலர் உணவுக்காக அந்த பசுக்களை கொல்கின்றனர். பசுக்களைப் பாதுகாக்கப்படாவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications