மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நோட்டீஸ்!
பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
டெல்லி : மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு மக்களவைச் செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில், பாஜக மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரும் கட்சிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பலமுறை கோரிக்கை வைத்தும் மத்திய அரசு செவிசாய்க்காததால், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் நாடாளுமன்ற லோக்சபாவில் நோட்டீஸ் கொடுத்துள்ளன.

ஆனால், தொடர்ந்து ஆந்திர விவகாரம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருவதால், இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் 27ம் தேதி தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கட்சியும் பாஜக மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரி நோட்டீஸ் அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் லோக்சபா தலைவர் கருணாகரன், இதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரும் கட்சிகளின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், தீர்மானம் விவாததிற்கு நாளை எடுத்துக்கொள்ளப்படுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதனிடையே, நாளை காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்கேற்க வேண்டியது கட்டாயம் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications