திரிணாமுல் காங்கிரசுடன் சி.பி.எம் இணைந்து செயல்பட புத்ததேவ் பட்டாச்சார்யா எதிர்ப்பு
கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்படுவதற்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இடதுசாரி கட்சிகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மதவாதத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதால், எந்த பயனும் கிடையாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய இளைஞர்களை அனுப்ப வேண்டும் என்று பேசியவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தபஸ்பால். அவர் மீது அக்கட்சி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உணர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications