விசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல்தளத்தில் கிரேன் உடைந்து 11 பேர் பலி... விசாரணைக்கு உத்தரவு!!
விசாகப்பட்டினம்: ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருக்கும் கப்பல் தளத்தில் கிரேன் உடைந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக விசாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் வினய் சந்த் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ் பாபு உறுதிபடுத்தியுள்ளார். சரக்கு பளு ஏற்று சோதனையின்போது கிரேன் உடைந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதுதொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

பெரிய சத்தத்துடன் கிரேன் அப்படியே கீழே சாய்கிறது. கிரேன் அருகே நின்று கொண்டு இருந்தவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் விழுந்ததில் 11 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கிரேனில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. தளத்தில் இருந்து கிரேன் அப்படியே அடியோடு சாய்ந்து கிடக்கிறது. அருகில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் இதுவரைக்கும் 11 பேர் உயிரிழந்து இருப்பதாக விசாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் வினய் சந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''புதிய கிரேன் பொருத்தும் பணி நடந்து முடிந்தது. முழு அளவிலான பணியை செயல்படுத்த கிரேன் இயக்கப்பட்டது. இந்துஸ்தான் கப்பல் தளம் மற்றும் மாவட்ட அளவிலான உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.
Recommended Video
விசாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் மற்றும் விசாகப்பட்டினம் நகர போலீஸ் கமிஷனர் இருவரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
#WATCH A crane collapses at Hindustan Shipyard Limited in Visakhapatnam, Andhra Pradesh. 10 dead and 1 injured in the incident, says DCP Suresh Babu. pic.twitter.com/BOuz1PdJu3
— ANI (@ANI) August 1, 2020
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications