கிரிக்கெட் வீரர்களே.. உடனே காஷ்மீரை விட்டு வெளியேறுங்க.. இர்ஃபான் பதான் உள்பட வீரர்களுக்கு உத்தரவு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரிரில் இருந்து உடனே வெளியேறுமாறு இர்ஃபான் பதான் உள்ளிட்ட 100 கிரிக்கெட் வீரர்களுக்கு அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 3 ஆக பிரிக்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக அச்சம் நிலவுகிறது. மேலும் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை வரும் சுதந்திர தினத்துக்குள் மத்திய அரசு ரத்து செய்யப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. சுமார் 60 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று அமர்நாத் யாத்திரையை ரத்து செய்த மத்திய அரசு உடனே அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேறு மாறு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் சுற்றுலா பயணிகளையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் விரைவில் வெளியேறுவதற்கு வசதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஏரளாமான விமானங்களை இயக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு அணிகளின் வீரர்கள் அங்கு வந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி ஆலோசகரான இர்ஃபான் பதானும் அங்கு உள்ளார்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி போட்டித் தொடர் தொடங்குவதாக இருந்த நிலையில் அந்த மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, வீரர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல அம்மாநில கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே 100 வீரர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. இர்பான் பதான் உள்ளிட்ட மேலும் 100 வீரர்கள், இன்று சொந்த ஊர் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications