Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"90 லட்சம் கொடுத்தால் தான் உடலுறவு!" முதலிரவில் பெண் சொன்ன வார்த்தை.. கதி கலங்கிய மாப்பிள்ளை

Subscribe to Oneindia Tamil

ஆக்ரா: திருமணத்திற்குப் பிறகு முதலிரவுக்கு ஆசையாகச் சென்ற இளைஞருக்கு இளம்பெண் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இந்த மாப்பிள்ளைக்கு அந்த இரவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு 'க்ரைம் த்ரில்லர்' படமாகவே மாறியுள்ளது. 90 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் உடலுறவு என மணமகள் போட்ட கண்டிஷனை கேட்டு அவர் அதிர்ந்து போனார்.

கல்யாணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டது என பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அனைவருக்கும் சொர்க்கத்தைப் போன்ற வாழ்க்கை கிடைப்பதில்லை. மாறாகச் சிலருக்கு மிக மோசமான வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

India Crime

உபி திருமணம்

ஆக்ராவின் ஜெகதீஷ்புரா பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் தம்பிக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடந்து முடிந்தது. சடங்குகள் முடிந்து, மணமகள் புகுந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். அன்றிரவு முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடந்துள்ளது. அப்போது மாப்பிள்ளையும் ஆசையாக அங்கு நுழைந்துள்ளார். அங்கேதான் அந்தப் பெரிய 'ட்விஸ்ட்' காத்திருந்தது.

அதாவது அறைக்குள் பல ஆசைகளுடன் வந்த கணவனிடம், "எனக்கு இப்போதே 90 லட்சம் ரூபாய் ரொக்கமாக வேண்டும். அதைக் கொடுத்தால் மட்டும் தான் நான் உன்னுடன் உறவு வைத்துக் கொள்வேன். இல்லையென்றால் என்னைத் தொடக் கூடாது" என மணமகள் கறாராகப் பேசியுள்ளார். இதைக் கேட்டவுடன் மாப்பிள்ளை அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார்.

அதிர்ச்சி

தான் தொட்டு தாலி கட்டிய பெண், தன்னுடன் நெருக்கமாக இருக்கப் பணம் கேட்கிறாரா என்பதை யோசித்து அதிர்ந்து போனார். இதனால் பணம் எல்லாம் தர முடியாது என அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. இதைக் கேட்ட குடும்பத்தினர், என்னவென்று விசாரித்துள்ளனர். அந்த பெண் சொன்னதைக் கேட்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இருப்பினும், "சி்ன்ன பொண்ணு.. தெரியாம பேசியிருக்கும்" என நினைத்து மாப்பிள்ளை வீட்டாரும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இருப்பினும், அந்த பெண் தனது நிலைப்பாட்டில் மாறாமல் இருந்துள்ளார். மேலும், பணம் கொடுக்க மறுத்ததால் தனது பிறந்த வீட்டுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மணமகளின் உறவினர்கள் அங்குப் படை எடுத்து வந்தனர்.

கொலை முயற்சி

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அது கைகலப்பாக மாறியுள்ளது. இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். குறிப்பாக மாப்பிள்ளை வீட்டாரைப் பெண் வீட்டார் மோசமாகத் தாக்கியுள்ளனர். வீட்டை வெளியே இருந்து பூட்டிச் சிறை பிடித்துள்ளனர். அத்துடன் நிற்காமல், அங்கிருந்த பிஎன்ஜி கேஸ் பைப்லைனை உடைத்து, வீட்டை எரிக்கவும் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. கேஸ் கசிந்து ஒரு பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உருவான நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாப்பிள்ளை வீட்டார் ஒருவழியாக உயிர் தப்பினர்.

போலீசாரிடம் புகார்

இது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டார் போலீசாரிடமும் புகாரளித்துள்ளனர். அதில் அந்த மணமகள் தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் பணத்திற்காக மட்டுமே இதற்குச் சம்மதித்ததாகவும் ஒப்புக்கொண்டாராம். அதையும் போலீசாரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர். இதற்கு நடுவே மாப்பிள்ளை வீட்டில் இருந்த நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களையும் அந்த பெண் சுருட்டிக்கொண்டு உறவினர்களுடன் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்தப் புகாரை வாங்க உள்ளூர் போலீசார் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இப்போது மணமகள், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பெண்ணைத் தரகராக இருந்து அறிமுகம் செய்து வைத்த நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+